Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளுமன்றத் தேர்தலுக்கு ரஜினியிடம் ஆதரவு கேட்போம் - இல.கணேசன் பேட்டி

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (15:23 IST)
ரஜினிகாந்தை சந்தித்து பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆதரவு கேட்போம் என்று பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
FILE

பா.ஜ.க சார்பில் சேலம் மாநகர், புறநகர் மற்றும் நாமக்கல் மாவட்ட அளவிலான நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு, இலங்கை மீனவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக முடிவு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. பா.ஜ.க.வை பொறுத்தவரை தேர்தலுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் 16 சதவீதம் வாக்குகள் மோடிக்கு ஆதரவாக உள்ளது. இங்கு பலமான கூட்டணி அமைப்பதே எங்கள் தேவை. ஏற்கனவே, மதிமுக, ஐஜேகே ஆகிய கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. மேலும் பாமக, புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் பேசி வருகிறோம். தேமுதிகவுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அந்த கட்சி எங்களுடன் சேருவதற்கு சாதகமான நிலை உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தை அணுகி ஆதரவு கேட்போம். மோடிக்கு அவர் கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார் என்று இல.கணேசன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments