Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலில் இடது சாரி கட்சிகள் அ. தி.மு.க.,வுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் : ஜெயலலிதா

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (16:07 IST)
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இடது சாரி கட்சிகள் அ. தி.மு.க.,வுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். இந்த கூட்டணி அதிக இடங்களை வென்றால் ஜெயலலிதா, பிரதமராகும் வாய்ப்பு உள்ளது என சந்திப்பிற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பரதன் கூறினார்.
FILE

கூட்டணி குறித்து இன்று அ,தி.மு.க, பொது செயலரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பரதன், சுதாகர் ரெட்டி, தா.பாண்டியன் ஆகியோர் போயஸ் கார்டனில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் தற்போதைய கூட்டணி நிலை நீடிக்க முடிவு செய்யப்பட்டது.

கூட்டணி குறித்து ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இடது சாரிகளுடன் இணைந்து செயலாற்றுவோம். அமைதி, வளம், வளர்ச்சி, ஆகியனவற்றை குறிக்கோளுடன் தேர்தலை சந்திப்போம். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments