குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 5 ஆம் தேதி முதல் அங்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
16 கேள்விகள் அடங்கிய பட்டியலுடன் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக இன்று காலை சென்ற அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை சந்திக்க விரும்பினால் முன் கூட்டி ‘அப்பாயிண்ட்மெண்ட்’ பெற வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால் மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.
மோடியுடன் நேருக்கு நேர் பேசும் பாணியில் அவர் கூறியதாவது:-