Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TNPSC குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2009 (16:50 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் வரும் அக்டோபரில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள துணை ஆட்சியர ், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர ், துணைப் பதிவாளர் (கூட்டுறவுத்துறை), மாவட்டப் பதிவாளர் (பதிவுத்துறை) உள்ளிட்ட பதவிகளுக்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

மொத்தம் 88 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இத்தேர்வை 45,000க்கும் அதிகமானோர் எழுதினர். தற்போது இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தகுதி பெற்ற 888 பேர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 3, 4ஆம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

Show comments