இன்று நடைபெறுவதாக இருந்த குரூப்-2 நேர்முகத் தேர்வு அக்டோபர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தலைமை செயலகத்தில் உதவிப்பிரிவு அதிகார ி, சார்-பதிவாளர ், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர ், வருவாய் துறை உதவியாளர் உட்பட பல்வேறு விதமான பதவிகளில் 2,500 காலி இடங்களை நிரப்ப அண்மையில் TNPS C குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் அக்டோபர் 14ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில ், ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் அகால மரணத்தை தொடர்ந்து தமிழக அரசு இன்று பொது விடுமுறை அறிவித்ததால், இன்று நடைபெறுவதாக இருந்த குரூப்-2 நேர்முகத் தேர்வு அக்டோபர் 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக TNPS C அறிவித்துள்ளது.