தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 15,000க்கும் மேற்பட் ட மாணவர்கள் விண்ணப்பம் வாங்கியுள்ளனர்.
இதுவரை 10,000 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சென்ன ை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர். விண்ணப்பங்களைப் பெறவும ், பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் வரும் 17ஆம் தேதி கடைச ி நாளாகும்.
சென்ன ை, செங்கல்பட்ட ு, திருச்ச ி, மதுர ை, கோவ ை, சேலம ் உட்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,483 எம்.பி.பி.எஸ். இடங்கள ் மட்டுமே உள்ளன.
பிளஸ் 2 தேர்வில் மருத்துவத்துக்கு உரிய சமமான ஒட்டுமொத் த கூட்டு மதிப்பெண்ணைப் பெற்றுள்ள மாணவர்களை வரிசைப்படுத்த சம வாய்ப்பு எண் (ரேண்டம ் எண ்) வழங்கப்படும். எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு சென்னையில ் வரும் 19ஆம் தேதி சம வாய்ப்பு எண் அளிக்கப்படும்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனர ் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. ரேங்க் பட்டியல ் சுகாதாரத் துறையின் tnhealth.org இணைய தளத்திலும் அன்றைய தினம் வெளியிடப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் ரேங்க் பட்டியல் வரும் 25ஆம் தேத ி வெளியிடப்படுகிறது. இதையடுத்து பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு உள்ளதா அல்லத ு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளதா என்பதை 3 நாள் இடைவெளியில் மாணவர்கள ் உறுதி செய்து கொள்ள முடியும்.
பொறியியல் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 10ஆம ் தேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கலந்தாய்வ ு ஜூலை 6ஆம் தேதி தொடங்குகிறது.