Webdunia - Bharat's app for daily news and videos

Install App

MBBS படிப்பில் சேர 15,000 பேர் ஆர்வம்: விண்ணப்பிக்க இறுதிநாள் ஜூன் 17

Webdunia
திங்கள், 15 ஜூன் 2009 (16:42 IST)
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 15,000க்கும் மேற்பட் ட மாணவர்கள் விண்ணப்பம் வாங்கியுள்ளனர்.

இதுவரை 10,000 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சென்ன ை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர். விண்ணப்பங்களைப் பெறவும ், பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் வரும் 17ஆம் தேதி கடைச ி நாளாகும்.

சென்ன ை, செங்கல்பட்ட ு, திருச்ச ி, மதுர ை, கோவ ை, சேலம ் உட்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,483 எம்.பி.பி.எஸ். இடங்கள ் மட்டுமே உள்ளன.

பிளஸ் 2 தேர்வில் மருத்துவத்துக்கு உரிய சமமான ஒட்டுமொத் த கூட்டு மதிப்பெண்ணைப் பெற்றுள்ள மாணவர்களை வரிசைப்படுத்த சம வாய்ப்பு எண் (ரேண்டம ் எண ்) வழங்கப்படும். எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு சென்னையில ் வரும் 19ஆம் தேதி சம வாய்ப்பு எண் அளிக்கப்படும்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனர ் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. ரேங்க் பட்டியல ் சுகாதாரத் துறையின் tnhealth.org இணைய தளத்திலும் அன்றைய தினம் வெளியிடப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் ரேங்க் பட்டியல் வரும் 25ஆம் தேத ி வெளியிடப்படுகிறது. இதையடுத்து பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு உள்ளதா அல்லத ு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளதா என்பதை 3 நாள் இடைவெளியில் மாணவர்கள ் உறுதி செய்து கொள்ள முடியும்.

பொறியியல் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 10ஆம ் தேதி தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கலந்தாய்வ ு ஜூலை 6ஆம் தேதி தொடங்குகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Show comments