Webdunia - Bharat's app for daily news and videos

Install App

MBA, M.Sc. படிப்புகளை அண்ணா பல்கலை. நடத்தலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2009 (12:09 IST)
MBA, MC A மற்றும் M.Sc., உள்ளிட்ட பொறியியல் அல்லாத படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொறியியல் அல்லாத படிப்புகளை சென்ன ை, கோவை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வழக்கறிஞர்கள் சிவக்குமார ், மணிசுந்தர் கோபால் ஆஜராக ி, “பொறியியல் அல்லாத எம்.பி. ஏ, எம்.சி.ஏ மற்றும் இதர டிப்ளமோ படிப்புகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளது. இதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அங்கீகாரம் தேவையில்ல ை” என்றனர்.

கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் முரளிகுமரன் ஆஜராக ி, “கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற வேண்டும ் ” என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில ், பொறியியல் அல்லாத படிப்புகள் நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக சட்டத்தில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற்றுதான் இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை.

எனவே பொறியியல் அல்லாத எம்.பி. ஏ, எம்.சி. ஏ, எம்.எஸ்சி படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தலாம். இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை நிராகரிக்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments