தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு பி.ஏ.பி.எல் பட்டப்படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கு ஜூன் முதல் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் வரும ் 15 ஆம் தேதி கடைசி என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்நிலையில் ஜூன ் 25 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.