Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1,023 விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணை

1,023 விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணை
சென்னை , புதன், 8 ஜூலை 2009 (13:46 IST)
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுக்கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 1,023 பேருக்கு முதல்வர் கருணாநிதி இன்று பணி நியமன ஆணை வழங்கினார்.

PR photoFILE
















சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று காலை நடைபெறற் விழாவுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலை வகித்தார். முதலவர் கருணாநிதி விரிவுரையாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார்.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட விரிவுரையாளர்களுக்கு நாளை முதல் ஒரு மாதம் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil