பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கான மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான தகுதித் தேர்வுக்கு இலவச சிறப்புப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கான யு.ஜி.சி., நெட்/செட் பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெ.சின்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கண்ட வகுப்பைச் சேர்ந்த யு.ஜி.சி.-நெட் தகுதித் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு வரும் 13ஆம் தேதி முதல் வணிகவியல் மற்றும் மேலாண்மைப் பாடப் பிரிவுகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் தாள்களுக்கான பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசமாக நடைபெற உள்ளது.
வகுப்புகள் அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது. மேலும், முதல் தாளுக்கான சிறப்பு வகுப்புகளும் டிசம்பர் 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதில் கலந்துகொள்ள வருவோர் டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ள யு.ஜி.சி-நெட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்து தங்களைத் தயார் செய்து கொண்டிருக்கும் ஆர்வமுள்ள தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளரை 0452-2456100 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சின்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.