Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுநிலை மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2009 (16:41 IST)
ஜனவரி 10ஆம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் தினம் என்பதால் அன்றைய தினத்தில் நடத்துவதாக அறிவித்த முதுநிலை மருத்துவக் கல்விக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் விடுத்துள்ள செய்தியில், “வரும் ஜனவரி 10ஆம் தேதி நாடு முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக முகாம்கள் நடத்தப்படும். அன்றைய தினம் நுழைவுத் தேர்வை அறிவித்துள்ளதால், முகாம்களில் சேவையாற்று மாணவ, மாணவிகள் அதனை எழுத முடியாமல் போகும்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இத்தேவை வேறொரு தேதிக்கு தள்ளி வைத்திட வேண்டும் என மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும ் ” எனக் கூறியுள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments