Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில கல்வி பாடத்திட்டத்தில் மத்திய அரசு தலையிடாது: அமைச்சர் டி.புரந்தேஸ்வரி

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (18:03 IST)
மாநிலக் கல்வித்திட்டத்தில் மத்திய அரசு தலையிடாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தேஸ்வரி கூறியுள்ளார்.

ஸ்ரீ பெரும்புதூர் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது:

கல்விக் கடனுக்கான வட்டி மானியம் வழங்க அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக உரிய துறைகளிடம் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்த கல்வி நிறுவனங்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுத்தது. இப்பிரச்னை தொடர்பாக ஆராய ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 16 மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 14 சிறப்பு உயர்கல்வி நிறுவனங்களை தொடங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மத்திய பல்கலைக்கழகங்கள் இல்லாத பகுதிகளில் அவை தொடங்கப்படும். மாநில கல்வி பாடத்திட்டத்தில் மத்திய அரசு தலையிடாது.

இந்தியாவில் அயல்நாட்டு பல்கலைக்கழங்களை தொடங்க அனுமதி தருவது குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது. நமது நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை புரட்சியால் ஆராய்ச்சித் துறைக்கு சிறிது பாதிப்பு ஏற்பட்டது. இளைஞர்களை ஆராய்ச்சி துறையின் பக்கம் ஈர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

Show comments