Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் விரும்பினால் SSLC பொதுத்தேர்வு முறை அமல்?

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (12:06 IST)
மத்திய கல்வி வாரியப் ( CBS E) பாடத் திட்டம் கொண்ட பள்ளிகளில், மாணவர்கள் விரும்பினால் மட்டும் SSL C பொதுத்தேர்வு எழுதும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கான திட்ட வரைவை மத்திய கல்வி வாரியம் ( CBS E) விரைவில் மத்திய அரசிடம் வழங்க உள்ளதாக CBS E அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய CBS E அதிகாரி ஒருவர், CBS E பாடத்திட்டம் கொண்ட பள்ளிகளில் SSL C பொதுத்தேர்வை மாணவர்கள் விரும்பினால் மட்டும் எழுதவும், ரேங்க் முறைக்கு பதிலாக கிரேடு ( grad e) முறையை அமல்படுத்தும் திட்டம ், கடந்த 2005ஆம் ஆண்டு முதலே அரசுக்கு இருந்து வந்தது.

ஆனால் மாநில அரசு பாடத்திட்டங்களை கொண்ட பள்ளிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத காரணத்தால், இத்திட்டத்தை CBS E பள்ளிகளில் மட்டும் அடுத்தாண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், SSL C பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி விவாதிப்பதற்காக சென்னை, திருவனந்தபுரம், சண்டிகாரில் நடந்த பயிற்சிப் பட்டறையில், SSL C பொதுத்தேர்வை ரத்து செய்வதன் நன்மை குறித்து அனைவரும் உணர்ந்துள்ளதால் மத்திய மனிதவள மேம்பாட்டு வாரியம் உற்சாகம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து புதுடெல்லியில் இன்று நடைபெறும் மத்திய கல்வி வாரியத்தின் ஆண்டுக் கூட்டத்தில் SSL C பொதுத்தேர்வு முறையை ரத்து செய்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!