Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கான விசா விதிகளை கடுமையாக்க ஆஸி. முடிவு

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2009 (13:24 IST)
ஆஸ்ட்ரேலியாவில் தங்கி கல்வி பயில்வதற்காக விசா கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களின் மீதான நடைமுறைகளை ஆஸ்ட்ரேலிய குடியேற்றம் மற்றும் குடியுரிமை இலாகா வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மோசடியாளர்கள் மற்றும் ஆஸ்ட்ரேலியாவில் வாழ்வதற்குத் தேவையான நிதி வசதி இல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைவது தடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கல்வி பயில்வதாகக் கூறி ஆஸ்ட்ரேலியாவிற்கு வந்து, அதன் பின்னர் பணியாற்றத் துவங்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2008-09இல் மாணவர்களுக்கான விசா திட்டத்தின் கீழ் 3,62,193 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதில் தகுதியற்ற 28,000 விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் ஆஸ்ட்ரேலிய குடியேற்றம் மற்றும் குடியுரிமை அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Show comments