பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 6ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் இன்று மாலை வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் என்றும் கூறினார்.
விண்ணப்பிக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் என்று தெரிவித்த மன்னர் ஜவகர், நாளை மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் நேரிலோ தபால் மற்றும் கூரியர் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் கூறினார்.
நேற்று வரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும் மன்னர் ஜவகர் கூறினார்.