Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகும்

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2009 (12:14 IST)
பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகலாம் என்றும், 10ஆம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், ஒன்று முதல் 3 பாடங்கள் வரை தோல்வியுற்ற ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 927 மாணவர்களும், கடந்த ஏப்ரலில் நடந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 பாடங்கள் வரை தோல்வியடைந்த ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 642 மாணவர்களும் உடனடித் தேர்வை எழுதினர்.

தற்போது இந்த தேர்வுகளின் விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்டன. இதில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி இந்த வாரத்திற்குள் முடிந்து விடும் என்பதால் வரும் 27 அல்லது 28ஆம் தேதியில் பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் எனத் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் 10ஆம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments