பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகும்

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2009 (12:14 IST)
பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகலாம் என்றும், 10ஆம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், ஒன்று முதல் 3 பாடங்கள் வரை தோல்வியுற்ற ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 927 மாணவர்களும், கடந்த ஏப்ரலில் நடந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 பாடங்கள் வரை தோல்வியடைந்த ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 642 மாணவர்களும் உடனடித் தேர்வை எழுதினர்.

தற்போது இந்த தேர்வுகளின் விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்டன. இதில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி இந்த வாரத்திற்குள் முடிந்து விடும் என்பதால் வரும் 27 அல்லது 28ஆம் தேதியில் பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் எனத் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் 10ஆம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

Show comments