Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகும்

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2009 (12:14 IST)
பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகலாம் என்றும், 10ஆம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், ஒன்று முதல் 3 பாடங்கள் வரை தோல்வியுற்ற ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 927 மாணவர்களும், கடந்த ஏப்ரலில் நடந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 பாடங்கள் வரை தோல்வியடைந்த ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 642 மாணவர்களும் உடனடித் தேர்வை எழுதினர்.

தற்போது இந்த தேர்வுகளின் விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்டன. இதில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி இந்த வாரத்திற்குள் முடிந்து விடும் என்பதால் வரும் 27 அல்லது 28ஆம் தேதியில் பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் எனத் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் 10ஆம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

Show comments