Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை பட்டமளிப்பு விழா

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2009 (15:43 IST)
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நவம்பர் 4-ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பு தடை செய்வதற்கு முன் வரை தேர்ச்சி பெற்ற 1,199 பேர் உள்பட முதுநிலை மற்றும் இளநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளில் மொத்தம் 15,650 பேர் பட்டம் பெறுகின்றனர்.

பல்கலைக்கழகத் துணைவேந்தராக கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்ற கல்யாணி அன்புச்செல்வன் முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நவம்பர் 4-ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டமளிப்பு விழாவில் ‘மாணவர் விவரத் தொகுப்பு திட்டத்த ை ’ துவக்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் கீழ ், மாணவரின் முகவர ி, அவர் படிக்க வேண்டிய பாடங்கள ், செலுத்த வேண்டிய கல்விக் கட்டண விவரங்கள ், கடிதத் தொடர்பு விவரங்கள ், தேர்வு முடிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பல்கலைக்கழகத்தின் tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

இதுதவி ர, முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்தல ், நகல் அடையாள அட்டை பெற விண்ணப்பித்தல ், தேர்விற்கு விண்ணப்பித்தல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். இத்தகைய திட்டம் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை.

திறந்தநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும ், அவர்களைத் தேர்விற்குத் தயார் செய்யும் வகையிலும ், பல்வேறு கல்வி மையங்களில் படிக்கும் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ு, அவர்களுக்கு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களைக் கொண்டு பாடங்களைத் தொகுத்து வழங்கவும் பரிசீலிக்கப்படுகிறது. தவி ர, உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத தனியார் கல்வி மையங்களை மூடும் நடவடிக்கை தொடரும ்' என்று கல்யாணி கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments