Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய அறிவியல் திறனாய்வுத் தேர்வு 2010: மாணவர்களுக்கு அழைப்பு

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2009 (16:18 IST)
வரும் 2010ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் திறனாய்வுத் தேர்வில் பங்கேற்க 2ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு யுனிஃபைட் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக யுனிஃபைட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் 250 மையங்களில் தேசிய அறிவியில் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. வரும் 2010 ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதனை ஆன்-லைன் மூலமாக செலுத்தலாம்.

தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள ் unifiedcouncil.co m என்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி மாதிரி வினாத்தாள் பெற விரும்பும் மாணவர்கள் அதற்குரிய கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பரிசுகள் காத்திருக்கின்றன. மேலும் இத்தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ‘சக்சஸ் சீரிஸ் புக ் ’ என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

Show comments