Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறந்தநிலைப் பல்கலையில் பட்டம் பெற்றவரா நீங்கள்?

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (13:00 IST)
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பால், 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்காமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களின் மூலம் பட்டம் பெற்றவர்கள் இனி அரசு பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் வெங்கட் ராமன் கடந்த 18ஆம் தேதி பிறப்பித்த அரசாணையில், பள்ளி இறுதித் தேர்வு மற்றும் பள்ளி மேல்நிலைக் கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் பெறப்படும் பட்டயம், பட்டம், முதுநிலை பட்டம் மட்டுமே பொதுப் பணி நியமனம், பதவி உயர்வு பெறுதல் ஆகியவற்றுக்கு அங்கீகரிக்கப்படும் என ஆணையிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதாமல், நேரடியாக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் இனி தமிழக அரசு பணிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தற்போது 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதாமல், நேரடியாக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று அரசு பணியில் உள்ளவர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

Show comments