திருவாரூரில் மத்திய பல்கலை: அமைச்சர் கபில் சிபல் துவக்கினார்

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2009 (17:40 IST)
திருவாரூரில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் அமை‌க்க‌ப்பட உ‌ள்ள மத்திய பல்கலைக்கழக‌த்‌தை மத்திய அமை‌ச்ச‌ர் கபில்சிபல் இ‌ன்று துவக்கி வை‌த்தா‌ர். முதல்வர் கருணாநிதி விழாவுக்கு தலைமை தாங்கினார்.

திருவாரூர் ஆ‌ட்‌சிய‌ர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட உ‌ள்ள இந்த மத்திய பல்கலைக்கழகம், வண்டாம்பாளையம், திருவாரூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான தியாகராஜபுரம ், பெரும்புகலூர ், நீலாத்தூரில் 516 ஏக்கர் நில‌ப்பர‌ப்‌‌பி‌‌ல் அமை‌கிறது.

முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நட‌ந்த விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமை‌ச்ச‌ர் கபில்சிபல் பல்கலைக்கழக‌த்‌தை தொட‌ங்‌‌கி வை‌த்தா‌ர்.

‌ திருவாரூ‌ர் மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ ், எம்.ஏ. ஆங்கிலம் உட்பட 4 பாடப்பிரிவுகள் முதலில் தொடங்கப்பட உள்ளன. மேலும ், பிளஸ் 2 படித்த மாணவர்கள் இளநில ை, முதுநிலை ஆய்வு படிப்புகள் வரை தொடர்ச்சியாக பயிலும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி முறை கொண்டு வரப்படவுள்ளது.

தொழில்படிப்புகள ், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற புதிய பாடப்பிரிவுகளும் படிப்படியாக கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மக்கள் பிரச்சனையை விட மெஸ்ஸி வருகை பெரியதா? ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!

அமித்ஷாவிடம் 65 தொகுதிகள் கொண்ட பட்டியல்.. நயினார் நாகேந்திரன் அளித்தாரா?

பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வீழ்ச்சி

ரூ.1 லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்னும் 320 ரூபாய் தான்..

Show comments