Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 4,342 பேருக்கு நேர்காணல் அழைப்பு

Webdunia
புதன், 29 ஜூலை 2009 (16:15 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ( TNPS C) குரூப்-2 எழுத்துத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்ச்சி பெற்ற 4 ஆயிரத்து 342 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. தலைமைச் செயலக உதவிப்பிரிவு அலுவலர ், டி.என்.பி.எஸ்.சி. உதவிப் பிரிவு அலுவலர ், சார்பதிவாளர் நிலை-2, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் என மொத்தம் 2 ஆயிரத்து 73 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடந்தது. சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 342 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் ஆகஸ்ட் 18ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும். தேர்ச்சி பெற்றவர்களின் விவரம், டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

Show comments