Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமப்புறத்தில் அதிகளவு மாணவர்களை சேர்க்க சென்னை பல்கலை. திட்டம்

Webdunia
புதன், 14 அக்டோபர் 2009 (17:40 IST)
கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை அளிக்கவும், உயர் கல்வி பெறும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சென்னைப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருவாசகம், இத்திட்டத்திற்காக கிராமப்புறங்களில் துவக்கப்படும் புதிய கல்வி நிறுவனங்களுக்கு, இணைப்புக் கட்டணத்தில் (சென்னைப் பல்கலையுடன்) 50% சலுகை வழங்குவதுடன், அந்த நிறுவனங்களுக்கு கூடுதலாக 10% மாணவர்கள் எண்ணிக்கையும் வழங்கப்படும். இதன் காரணமாக கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உயர்கல்வி பெற முடியும் என்றார்.

விரைவில் நடைபெற உள்ள பல்கலைக்கழக நிர்வாக சபைக் கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்படும் என்றும் திருவாசகம் கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments