கல்லூரி விரிவுரையாளர் பணி நியமனம் தொடர்பாக, 20 ஆம ் தேதி நடக்க இருந்த நேர்முகத் தேர்வு 22 ஆம ் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளத ு என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதில் தாழ்த்தப்பட் ட, மலைவாழ ் பிரிவினருக்கு 20ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடக்க இருந்தது. இந்த நேர்முகத் தேர்வு பல்வேறு காரணங்களால் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இடம், நேரம் மற்றும் குழு ஆகியவை ஏற்கனவே அறிவித்துள்ளபடிதான் இருக்கும். 22 ஆம ் தேதிதான் கடைசி நாள் என்பதால் நேர்முகத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த அறிவிப்ப ைய ே அதிகாரப்பூர்வமான அழைப்புக் கடிதமாக எடுத ்த ுக்கொள்ள வேண்டும். தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்ல ை" என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.