Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்தாண்டு B.L. படிப்பு: நாளை 2ஆம் கட்ட கலந்தாய்வு

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2009 (12:16 IST)
ஐந்தாண்டு சட்டப் படிப்புகளில் சேருவதற்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை நடைபெறும் 2ஆம் கட்ட கலந்தாய்வில் பொதுப்பிரிவில் கட் ஆப் மதிப்பெண் 73.875 பெற்றவர்களும், எஸ்.சி(அருந்ததியினர்)-55, எஸ்.சி-68.500, பி.சி-49.375, எம்.பி.சி/டி.என்.சி-49 பெற்ற மாணவர்களும் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதியுள்ள மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. எனினும், அழைப்புக் கடிதம் கிடைக்காத தகுதியுள்ள மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களை அறிய 24641212 அல்லது 24641919 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Show comments