Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் பயிற்றுநர் தேர்வாளர்களுக்கு ஆகஸ்ட் 25இல் கலந்தாய்வு

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2009 (13:43 IST)
ஆசிரியர் பயிற்றுநர் தேர்வாளர்கள் 351 பேருக்கு நியமன ஆணை வழங்குவது தொடர்பாக ஆகஸ்ட் 25ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவருக்கும் கல்வ ி ” திட்டத்தைச் சார்ந்த வட்டார மற்றும் குறுவள மையங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பாடங்களுக்கான 351 தேர்வாளர்களுக்கு நியமன ஆணை வழங்குவது தொடர்பாக வரும் 25ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.

மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள புனித ரபேல்ஸ் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்கும். கலந்தாய்விற்கு வரும் தேர்வாளர்கள், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அசல் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து பெறப்பட்ட தெரிவுக் கடிதம் ஆகியவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Show comments