சில குறிப்பிட்ட முதுநிலைப் படிப்புகளை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நேரடிக் கல்வி முறையில் வழங்கி வருவதாக அதன் துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இன்று நடந்த IGNO U பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், கல்வி அளிப்பத்தில் சர்வதேச முறையை புகுத்தும் விதமாக, மாணவர்களுக்கு எளிதான வகையில் 3 முறைகளில் (தபால் வழி, நேரடிக் கல்வி, ஆன்-லைன்) கல்வி கற்பிக்கப்படுகிறது.
இன்னோவில் வழங்கப்படும் பெரும்பாலான படிப்புகள் தபால் வழி மற்றும் நேரடிக் கல்வி என 2 முறைகளில் வழங்கப்படுவதாகவும், இதுமட்டுமின்றி முறையான பயிற்சி, திட்டப் பணிகள் மற்றும் பணியிடப் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படுவதாகவும் துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை கூறினார்.