Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிற்பிரிவு கலந்தாய்வில் அரசு இடங்கள் நிரம்பின

Webdunia
புதன், 8 ஜூலை 2009 (14:07 IST)
அரசு மற்றும ் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் தொழிற் பிரிவினருக்கு உள்ள அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் 3,404 இடங்கள் தொழிற்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் நேற்று வரை 1,598 இடங்கள் நிரம்பிவிட்டன. சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,806 இடங்கள் மட்டுமே தற்போது காலியாக உள்ளன. பொறியியல் படிப்பில் சேருவதற்கு தொழிற்பிரிவில் 5,217 பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 6ஆம் தேதி துவங்கியது. கடந்த 2 தினங்களாக நடைபெற்ற கலந்தாய்வில் 1,798 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்களில் 198 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

தொழிற்பிரிவுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவில், சுமார் ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்பிரிவுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு பின்னர் நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments