Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செப்.20 இல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வுத் தேர்வு

செப்.20 இல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வுத் தேர்வு
சென்னை , செவ்வாய், 21 ஜூலை 2009 (11:20 IST)
தமிழக ஊரகப் பகுதிகளில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் திறனாய்வுத் தேர்வு இந்தாண்டு செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 பேர் (50 ஆண்கள், 50 பெண்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும். உதவித்தொகை பெறுவதற்கு மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்கான திறனாய்வு தேர்வு செப்டம்பர் 20ஆம் தேதி நடக்கிறது.

ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்குள் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் முதன்மைக் கல்வி அலுவலரிடம் சேவைக் கட்டணமாக ரூ.10ஐ மாணவர்கள் செலுத்த வேண்டும் எ‌ன்று வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil