Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 4,342 பேருக்கு நேர்காணல் அழைப்பு

Webdunia
புதன், 29 ஜூலை 2009 (16:15 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ( TNPS C) குரூப்-2 எழுத்துத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்ச்சி பெற்ற 4 ஆயிரத்து 342 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. தலைமைச் செயலக உதவிப்பிரிவு அலுவலர ், டி.என்.பி.எஸ்.சி. உதவிப் பிரிவு அலுவலர ், சார்பதிவாளர் நிலை-2, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் என மொத்தம் 2 ஆயிரத்து 73 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடந்தது. சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 342 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் ஆகஸ்ட் 18ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும். தேர்ச்சி பெற்றவர்களின் விவரம், டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments