Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களு‌க்கு நியமன ஆணை வழங்க கோரிய மனு ‌நிராக‌ரி‌ப்பு

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2009 (12:23 IST)
குரூ‌ப்-1 தே‌ர்‌வி‌ல் தே‌ர்‌ச்‌சி பெ‌ற்றவ‌‌ர்களு‌க்கு ப‌ணி ‌நியமன ஆணை வழ‌ங்க‌க் கோ‌ரி தா‌‌க்க‌ல் செ‌ய்த மனுவை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

சென்னையை சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாம ி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில ், தமிழகத்தில் துணை ஆ‌ட்‌சிய‌ர ், டி.எஸ்.பி ஆகிய பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டு 172 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.

இது சட்ட விரோதமானது. முக்கிய பதவிகள் காலியாக இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியமன உத்தரவு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனுவில் கூறியிருந்தார்.

இ‌ந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.கோகல ே, நீதிபதி முருகேசன் ஆகியோர் விசாரித்தனர். அ‌ப்போது அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா ஆஜராக ி, ‘குரூப்-1 தேர்வை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நியமன உத்தரவு வழங்க தடை பெற்றுள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் நியமன உத்தரவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவ ே, மனுவை ‌நிராக‌ரி‌க்க வேண்டும ் ’ என்றார்.

இதை நீதிபதிகள் ஏற்று‌க் கொ‌ண்ட ு, டிராபிக் ராமசாமியின் மனுவை ‌நிராக‌ரி‌த்தன‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments