Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்தாண்டு B.L. படிப்பு: நாளை 2ஆம் கட்ட கலந்தாய்வு

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2009 (12:16 IST)
ஐந்தாண்டு சட்டப் படிப்புகளில் சேருவதற்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை நடைபெறும் 2ஆம் கட்ட கலந்தாய்வில் பொதுப்பிரிவில் கட் ஆப் மதிப்பெண் 73.875 பெற்றவர்களும், எஸ்.சி(அருந்ததியினர்)-55, எஸ்.சி-68.500, பி.சி-49.375, எம்.பி.சி/டி.என்.சி-49 பெற்ற மாணவர்களும் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதியுள்ள மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. எனினும், அழைப்புக் கடிதம் கிடைக்காத தகுதியுள்ள மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களை அறிய 24641212 அல்லது 24641919 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments