நெல்லையைச் சேர்ந்த அபிராமி சங்கரன் 7வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதநேய அறக்கட்டளையைச் சேர்ந்த மற்றொரு மாணவரான எம்.அரவிந்த் 8வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆக முதல் 10 இடங்களில் வென்ற மாணவர்களில் இருவர் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 98 பேர் தேச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 36 பேர் ஆவர். இவர்களில் 29 பேர் மாணவர்கள், 7 பேர் மாணவிகள்.
இவர்களில் ஆர்.ராகப்பிரியா 28வது இடத்திலும், மீர் முகமது 59வது இடத்திலும், எஸ்.கார்த்திகேயன் 118வது இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பி.சீனிவாசன் என்ற மாணவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகத்தைச் சேர்ந்த அவினாஷ் கே.நிலாங்கர், சி.பிரபாகர் ஆகிய மாணவர்கள் மனிதநேயத்தில் பயிற்சி பெற்றுத் தேர்வாகியுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் மனித நேயத்தில் பயிற்சி பெற்றவர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு 85 பேரும், வன பணிக்கு 12 பேரும் தேர்வாகி, பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவருக்கும் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாகவே பயிற்சியும், அவர்கள் தேர்வு எதிர்கொள்ளும்போது தேவைப்படும் அனைத்து வசதிகளும் மனித நேய அறக்கட்டளையால் செய்து தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.