Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 11இல் பொறியியல் சிறப்பு துணைக் கலந்தாய்வு

Webdunia
புதன், 29 ஜூலை 2009 (12:47 IST)
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் வெற்றி பெற்று மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான சிறப்பு துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புக்கான சிறப்பு துணை கலந்தாய்வில் பங்கேற்பதற்கான பொறியியல் விண்ணப்பங்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தேர்வு மையத்தில் இன்று (ஜூலை 29) முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை வழங்கப்படும்.

விண்ணப்பத்தின் விலை ரூ.500 (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250). ‘இயக்குநர ், மாணவர் சேர்க்க ை, அண்ணா பல்கலைக்கழகம்-சென்ன ை’ என்ற பெயரில ், சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி மூலம் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சிறப்பு துணை கலந்தாய்வுக்கு தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற விரும்பும் மாணவர்கள், ‘செயலாளர ், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்க ை, அண்ணா பல்கலைக்கழகம ், சென்ன ை ’ என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments