Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தான் படித்த பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதியளித்த சாலமன் பாப்பையா

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (21:13 IST)
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சிப் பள்ளியில் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா கடந்த 1941 முதல் 1945 ஆம் ஆண்டுவரை( 1 ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு வரை) படித்தார்.

தற்போது அப்பள்ளி பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக உள்ளது. இதில், 2000 க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ் நாடு அரசு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளியில் படித்த முன்னாள்  மாணவர்கள் உதலாம் என்று கூறியது.

அதன்படி, பலரும் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் பட்டிமன்றத்தில் தனக்கென தனி பாணியை வகுத்து  மக்கள் மனதில் இடம்பிடித்த பேராசிரியர் சாலமன் பாப்பையா, இப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தனது பங்காக ரூ. 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை  மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமாரிடம் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments