முடிவில் நேர்ந்தத ு, கூட்டணியில ் ப ா.ம.க. வ ை சேர்த்துக ் கொள்வத ு என்றும ், மாநிலங்களவ ை உறுப்பினர ் பதவ ி 2011 க்குப ் பிறக ு ப ா.ம.க. வுக்குத ் தரப்படும ் என்றும் கூறி, பா.ம.க.வுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டது த ி. ம ு. க.
இந்த சூழ்நிலையில் இன்று வரை யாருடன் கூட்டணிஎன்று ராமதாஸ் அறிவிக்கவில்லை. ஜனவரியில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவித்து விடுவேன் அல்லது பிப்ரவரியில் கண்டிப்பாக அறிவித்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். யாருடன் கூட்டணி என்பது குறித்து (கொள்கையின்றி) பேரம் பேசுவதே ஒரு சூதாட்டம் தானே என்று நினைக்கத் தோன்றுகிறது.
அரசியல் என்பதும் மக்களின் நலன் காக்க செய்யப்படுவதுதானே? ஆனால் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு ஊழல் செய்வதில் இருந்து சொத்து சேர்ப்பது வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையா என்ன? மக்கள் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றாமல் ஊழலில் ஈடுபடுவதும், எதிர்த்தவர்களுடனேயே கூட்டு சேர்வதும், அதிக இடங்களுக்காக கூட்டணி மாறுவது என்பதும் சூதாட்டம்தானே? அதை வைத்து அரசியலை சூதாட்டத்தின் மறு வடிவம் என்று கூற முடியுமா? அவ்வாறு கூறுவது எப்படி பொறுத்தமற்றதோ அதேபோல் கிரிக்கெட்டை சூதாட்ட விளையாட்டு என்று கூறுவதும் பொறுத்தமற்றது, நியாயமற்றதே.