''
நமது வீர விளையாட்டுகள் எல்லாம் மறைந்து, இப்போது தெருவெல்லாம் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். சூதாட்ட விளையாட்டான கிரிக்கெட் விளையாட்டை தமிழகத்திலிருந்தே ஒழிக்க வேண்டும். இதற்காக மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தை மேற்கொள்ள உள்ளோம் என்று கடந்த 13 ஆம் தேதி சென்னையில் பா.ம.க. சார்பில் நடைபெற்ற சமய நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு இவ்வாறு பேசியுள்ளார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்.சூதாட்ட விளையாட்டான கிரிக்கெட்டை’ என்று இராமதாஸ் வர்ணித்திருப்பது மிகவும் தவறானது, அந்த விளையாட்டைப் பற்றி அறியாமல் பேசுவதாகும்.கிரிக்கெட் விளையாட்டு தன்னவில் ஒரு சிறந்த நேர்த்தியான விளையாட்டே. பண்பாளர்கள் விளையாட்டு (Gentlemen Game) என்று கூட கூறுவதுண்டு. அந்த விளையாட்டை வைத்து சூதாடுபவர்கள்தான் கண்டனத்திற்குள்ளாக்கப்பட வேண்டியவர்களே தவிர, அதையே காரணமாக்கி கிரிக்கெட் விளையாட்டை சூதாட்ட விளையாட்டு என்று கூறுவது எவ்வாறு நியாயமாகும்?கிரிக்கெட் விளையாட்டிற்கு மருத்துவர் இராமதாஸ் கையாண்ட அதே அளவு கோலைக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சமீப கால அரசியல் அளவிட்டால் அதையும் சூதாட்டம் என்று எண்ணத்தோன்றாதா?
2006ஆம் தமிழக சட்டப்பேரவைதேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க. 18 இடங்கள் கைப்பற்றியது. இந்த கூட்டணி சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. 2009ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து 7 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை. இப்படி ஆதாயத்துக்காக கூட்டணி மாறுவதை அரசியல் சூதாட்டம் என்று கருதலாமா?
அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த இராமதாஸ், திடீரென தனக்கு ஜெயலலிதா உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி கூட்டணியில் இருந்து விலகினார். இன்று வரை யாருடன் கூட்டணி என்று அறிவிக்கவில்லை.
2004ஆம் ஆண்டு தி.மு.க. தயவில் மாநிலங்களவை உறுப்பினரான மருத்துவர் இராமதாசின் மகன் அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆனார். 2009 வரை அமைச்சராக இருந்த அன்புமணியின் மாநிலங்களவை பதவி காலம் கடந்த 2010ஆம் ஆண்டு முடிவடைந்தது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிவடைப்போவதை கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு மாநிலங்களவை இடம் கேட்டு கட்சியின் தலைவர் ஜி.கே.மணியை கருணாநிதியிடம் தூதுவிட்டு பார்த்தார் இராமதாஸ். பதவிக்காக தூது விடுவது, அவர்களுக்கு ஆதரவாக பேசுவதும் ஒரு சூதாட்டம் தானே?