தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டோருக்கு 1 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் ந.சுந்தரதேவன் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழக அரசின் கணக்குபடி பார்த்தால் நேற்று வரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123. இவர்களில் ஆண்கள் 58, பெண்கள் 35, குழந்தைகள் 30. உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சமும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ஆக இரண்டு லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்தொடர் மழையின் காரணமாக இறந்துள்ள 612 கால்நடைகளில் ஏறத்தாழ 390 கால்நடைகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சேதமடைந்துள்ள 17,417 குடிசைகள ், வீடுகளில், பகுதியாக சேதமடைந்தவை 14,447, முழுமையாக சேதமடைந்தவை 3,000. பகுதியாக சேதமடைந்தவைகளுக்கு தலா 2,500 ரூபாயும், முழுமையாக சேதமடைந்தவைகளுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
மழையின் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித்தொகை, கால்நடைகள் இழப்பீட்டுத் தொக ை, சேதமடைந்த வீடுகள ், குடிசைகளுக்கு மொத்த உதவித் தொகையாக ஒரு கோடியே 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடைந்ததா என்பது என்றால் சந்தேகம்தான்.
காற்றில் மின் கம்பிகள் அறுந்து விழுவதற்கு அரசு அல்லது மின்வாரியம் பொறுப்பில்லையா? இது ஏதோ மக்களே தேடிக் கொண்ட வினை என்பதுபோல் தமிழக அரசு பாராமுகம் காட்டுவது என்ன நியாயம்? மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் என்றால் என்ன பொருள், மின்னல் என்பது மிக அதிக மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் அல்லவா? அது தாக்கி இறந்தால் இழப்பீடு, மின்சார கம்பிகள் தாக்கி இறந்தால் இயற்கை மரணமா? அரசு தனது நிலையை விளக்க வேண்டும்.
இந்த நாட்டின் அரசு நிர்வாகம் உருப்படியாக செயல்பட்டு சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்தியிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் இப்படி மக்கள் மழையாலும், மின்னலாலும், வெள்ளத்தாலும் இறப்பார்களா?