'' புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அரசின் ஓராண்டு சாதனைக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்ற ி'' என்று முதல ்வர் ஜெயலலிதா மார்தட்டியுள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமானால், பணம், இலவசங்கள் தான் காரணம்.
அ.தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை, வளர்ச்சித்திட்டங்களை மனதில் நிலை நிறுத்தி, புதுக்கோட்டை தொகுதி வாக்காளர் கள் வாக்களித்துள்ளதாக முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால் இந்த 13 மாத ஆட்சியில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்பது கிடையாது. அதற்கு பதிலாக பால், பேருந்து, மின்சாரம் ஆகியவற்றின் கட்டணத்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் ஓராண்டு சாதனை.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, புதுக்கோட்டை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம ் ïனிஸ்டு கட்சியின் வேட்பாளர் 47 சதவீத வாக்குகள் பெற்றதையும், தற்போது, அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு 71 சதவீத வாக்குகள் பெற்றிருப்பதையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, அ.தி.மு.க. வாக்கு வங்கி 24 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.