இதற்கு மாற்றாக, கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் ‘சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம ் ’ தொடங்கப்படும் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் சுமார் 300 சதுர அடி அளவில் ரூபாய் 1.80 இலட்சம் செலவில் அரசே வீடு கட்டிக் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
அதே போல், நகர்ப்புர ஏழைகளின் வீட்டுவசதிக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் நிதியை ஒருங்கிணைத்து ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் சென்னை நகரில் ஆற்றோரங்களில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான நவீன வீடுகள் வழங்கப்படும் என்றும் தற்போதைய அ.இ.அ.தி.மு.க அரசு தெரிவித்துள்ளது.
சமச்சீர ் கல்வியை நிறுத்தாமல் அதன் பாடத்திட்டங்களை மறு ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைத்துள்ளது தமிழக அரசு. இந்த வல்லுநர் குழு ஆய்வு செய்து பரிந்துரைகளை அளித்த பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது அரசு.
சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வல்லுநர் குழு ஆய்வு நடத்தி முடிக்க வேண்டும். அப்படி முடித்தால்தான் மட்டுமே அடுத்த ஆண்டிலாவது சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த முடியும். ஆய்வு என்பதே திட்டத்தை நிறுத்தத்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழக அரசு நடந்து கொள்ள கூடாது என்பது நமது விருப்பமாக உள்ளது.