Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான டி20 : ஆஸ்.,வீரர்கள் 6 பேருக்கு ஓய்வு

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (12:54 IST)
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து 6 வீரர்களுக்கு ஓய்வளித்துள்ளது ஆஸ்திரேலியா வாரியம்.
 
ஐசிசி உலகக் கோப்பை தொடர்  நிறைவடைந்த நிலையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா மற்றும் கேப்டன் மேத்யூ வேர்ட் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டி-20 தொடர்  இந்தியாவில் நடந்து வருகிறது.
 
இதில், முதல்போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து விசாகபட்டினத்தில் நடந்த போட்டியிலும் இந்தியா வென்றது.
 
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து 6 வீரர்களுக்கு ஓய்வளித்துள்ளது ஆஸ்திரேலியா வாரியம்.
 
அதன்படி, ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜாம்பா, மேக்ஸ்வெல்,  ஷான் அபாட், ஜாஷ் இங்கிலிஸ், மார்க்ஸ் ஸ்டாய்னஸ் ஆகிய ஆஸ்திரேலியா வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
 
இவர்களுக்குப் பதிலாக, பென் மெக்டர்மோட், ஜாஷ் ஃபிலிப், கிரில் க்ரீன், பென் த்வர்ஷுயில் ஆகியோர் மீதமுள்ள 3 போட்டிகளில் விளையாடவுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments