Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித், கோலி, தோனி ஆகியோரில் யார் பெஸ்ட்?… யுவ்ராஜ் சிங் சொன்ன பதில்!

vinoth
வியாழன், 26 செப்டம்பர் 2024 (14:30 IST)
இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. அதனால் அவர் ஓய்வை அறிவித்தார்.

ஆனால் யுவ்ராஜ் சிங் கேரியர் விரைவில் முடிந்ததற்கு தோனிதான் காரணம் என்று யுவ்ராஜின் தந்தை யோக்ராஜ் சிங் கடந்த சில ஆண்டுகளாக தோனி மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். ஆனால் தன் தந்தை சொல்லும் கருத்துகள் தனக்கு உடன்பாடு இல்லாதவை என யுவ்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “டி 20 கிரிக்கெட்டில் ஒருவீரரைதான் தேர்வு செய்யவேண்டும் என்றால் ரோஹித், கோலி மற்றும் தோனி ஆகியோரில் நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள்” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் “டி 20 கிரிக்கெட் என்றால் நான் ரோஹித்தைதான் தேர்வு செய்வேன். ஏனென்றால் அவரின் அதிரடியான ஆட்டம் எதிரணியை நிலைகுலையச் செய்வது. மேலும் அவர் மிகச்சிறந்த கேப்டன்” எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி, தோனி ஆகியோரில் யார் பெஸ்ட்?… யுவ்ராஜ் சிங் சொன்ன பதில்!

5 வீரர்களைத் தக்கவைக்க அனுமதி… ஆனா RTM கிடையாது…? பிசிசிஐ முடிவு குறித்த தகவல்!

ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள்: குஜராத் பள்ளி மாணவர் சாதனை!

கான்பூர் டெஸ்ட் போட்டி நடக்குமா?.. முதல் மூன்று நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்… அஸ்வின் படைக்க போகும் சாதனைகள் லிஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments