Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியா? தோனியா? யுவராஜ் சிங் பதில்!

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (17:01 IST)
கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றிகளோடு ஏகப்பட்ட காயங்களையும் கண்ட வீரர் யுவராஜ் சிங். இவர் இந்திய அணியின் சிறந்த வீரர்களுள் ஒருவர். சமீபத்தில் இவர் ஒரு ஸ்போட்ஸ் இதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.
இந்த பேட்டியின் போது பல கிரிக்கெட் சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், கோலி, தோனி ஆகியோரின் கேப்டன்சி பற்றியும் பேசியுள்ளார். அவர் கூறிய சில கருத்துக்கள் பின்வருமாறு...
 
கோலி, தோனியை காட்டிலும் வித்தியாசமானவர். தோனி அமைதியானவர். கோலி ஆக்ரோஷமானவர். தோனி கேப்டன் ஆன போது அவருக்கு அனுபவ வீரர்கள், மேட்ச் வின்னர்கள் அணியில் இருந்தனர். 
 
ஆனால், கோலியின் கீழ் அணி உருமாற்றம் அடைந்துள்ளது. கோலி உடல்தகுதியில் சிறந்து விளங்குபவர், கண்டிப்பானவர். எனவே, அணி வீரர்களிடத்திலும் இதனை எதிர்பார்க்கிறார். 2019 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு கோலி சரியான திசையில் செல்வதாகவே உணர்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments