Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை 288 மில்லியன் ரசிகர்கள் டி.வி.யில் கண்டுகளிப்பு

உலகக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை 288 மில்லியன் ரசிகர்கள் டி.வி.யில் கண்டுகளிப்பு
, வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (09:30 IST)
இந்திய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் கண்டு களிக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை, 288 மில்லியன் ரசிகர்கள் தொலைக்காட்சியில் பார்வையிட்டுள்ளனர்.
பிப், 15 அன்று அடிலெய்டில் நடைபெற்ற உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இதில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அடிலெய்டில் மைதானமே ரசிகர்கள் நிரம்பி காட்சி அளித்தது. 
 
மேலும் இப்போட்டியை கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சியில் கண்டு ரசித்ததால் பெரும்பாலான முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச் சோடி காணப்பட்டது என்றால் மிகையாகாது.
 
இந்தியா நாட்டில் மட்டும் சுமர் 288 மில்லியன் ரசிகர்கள் இப்போட்டியை கண்டு ரசித்துள்ளனர் என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்தியாவில் அதிக ரசிகர்கள் கண்டுகளித்த போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil