Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் வாய்ப்பு கிடைத்தால் கவலைப்பட மாட்டோம்: மிஸ்பா

Webdunia
புதன், 18 மார்ச் 2015 (21:53 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 3வது காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் அளித்த ஒரு பேட்டியில் ‘உலகக்கோப்பை போட்டியுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எனது முடிவில் மாற்றம் இல்லை.
 
நான் ஓய்வு பெறுவதற்கு இது சரியான தருணமாக நான் கருதுகிறேன். உலகக்கோப்பையின் முடிவு மற்றும் எனது செயல்பாடுகளை பொறுத்து எனது முடிவில் மாற்றம் இருக்காது. டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து கேப்டனாக நீடிப்பேன்.
 
இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியுடன், அரையிறுதியில் மோதும் வாய்ப்பு கிடைத்தால் அதனை நினைத்து கவலைப்பட மாட்டோம். உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான மோசமான சாதனையை மாற்றுவதற்குரிய ஒரு வாய்ப்பாகவே கருதுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments