Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2015 (17:34 IST)
பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடாது எனவும் இந்த தொடரை இந்தியா நடத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் கூறியுள்ளார்.
 
இந்திய அரசிடம் இருந்து இந்தியா பாக்கிஸ்தான் தொடரை நடத்த அனுமதி வாங்கிய இந்திய கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கானிடம் அந்த தகவலை தெரிவித்தது. ஆனால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டாம். உங்கள் அணியை இந்தியாவுக்கு அனுப்புங்கள் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சஷாங்க் மனோகர் கேட்டுக்கொண்டார்.
 
இது குறித்து பேசிய சஹாரியார் கான், பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடாது, இந்தியா ஏன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டாம் என காரணம் கூறவில்லை. இந்த தொடர் நாங்கள் நடத்த வேண்டிய தொடர், அதனால் இந்த தொடரை நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டும் என எண்ணுகிறோம். ஏற்கனவே ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திய இந்தியா இப்போது அங்கு நடத்த மறுப்பது ஏன் என்றார்.
 
அடுத்த சில நாட்களில் மீண்டும் நாங்கள் பேசவிருக்கிறோம் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சஷாங்க் மனோகர் தெரிவித்தார்.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments