Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு அபராதம்

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு அபராதம்
, திங்கள், 13 அக்டோபர் 2014 (14:17 IST)
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2 ஆவது ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி, ஒரு 20 ஓவர் போட்டி, 3 டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கு பெறவுள்ளது. இதில் முன்னதாக நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
 
பின் அக், 11 அன்று 2 ஆவது ஒருநாள் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
 
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராவோவுக்கு 40 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 20 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
 
4 ஆவது ஒருநாள் போட்டி வருகிற அக், 17 அன்று தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil