ஷமியை அணியில் எடுத்தது ஏன்?... மனம் திறந்த கேப்டன் ரோஹித் ஷர்மா!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (08:41 IST)
இந்திய அணியில் உலகக்கோப்பை தொடரில் எதிர்பாராத திருப்பமாக ஷமி இணைந்துள்ளார்.

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் முதலில் முகமது ஷமி இல்லை. சொல்லப்போனால் கடந்த ஆண்டு டி 20 உலகக்கோப்பையில் விளையாடியதுதான் அவரின் கடைசி டி 20 சர்வதேச போட்டியாக இருந்தது.

அதன் பின்னர் அவர் இந்திய அணிக்காக டி 20 போட்டிகளில் தேர்வு செய்யப்படவே இல்லை. இந்நிலையில் இப்போது பூம்ராவுக்கு பதில் அவர் தேர்வாகியுள்ள நிலையில் அவரால் சிறப்பாக செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ராவும் எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் பூம்ராவுக்கு பதில் ஷமியை எடுத்தது குறித்து பேசியுள்ள இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா “பும்ரா இல்லாத போதே அவருக்கு பதில் அனுபவம் மிக்க வீரர்தான் வேண்டும் என நினைத்தோம். அதற்கு சரியான நபர் ஷமிதான். அவர் புதிய பந்துகளை சிறப்பாக வீசக்கூடியவர். அதனால் பூம்ராவின் இடத்துக்கு அவர்தான் சரியான மாற்று” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments