Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து டெஸ்ட்டில் கோலிக்கு பதில் அணியில் இணையப் போவது யார்?

vinoth
செவ்வாய், 23 ஜனவரி 2024 (07:55 IST)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோலி அதில் இடம்பெற்றிருந்தார். முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இப்போது கோலி விலகியுள்ள நிலையில் அவருக்கு பதில் அணியில் யார் சேர்க்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புஜாரா உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார். அதனால் அவர் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது. அதுபோல சர்பராஸ் கான் சில ஆண்டுகளாகவே ரஞ்சிக் கோப்பையில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் ரஜத் படீடார் மற்றும்அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கத் தயாரா?... வெங்கடேஷ் ஐயர் கொடுத்த பதில்!

பாகிஸ்தானுக்கு மட்டும் ஏன் அப்படி..? ஐசிசி மேல் பழியைப் போடும் முன்னாள் கேப்டன்!

பாகிஸ்தான் அணியை என்னிடம் கொடுங்கள்… நான் மாற்றிக் காட்டுகிறேன் – யுவ்ராஜ் சிங் தந்தை ஆவேசம்!

தொடர் மழை எதிரொலி.. சாம்பியன்ஸ் டிராபி இன்றைய போட்டி ரத்து..!

இந்த அணியை வச்சிகிட்டு இந்தியா B அணியைக் கூட ஜெயிக்க முடியாது… பாகிஸ்தானைக் கலாய்த்த இந்திய ஜாம்பவான்!

அடுத்த கட்டுரையில்
Show comments