Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”நாங்கள் மக்களுக்கு நிறைய ஆச்சரியங்களை அளிக்கவிருக்கிறோம்” - விராட் கோலி

”நாங்கள் மக்களுக்கு நிறைய ஆச்சரியங்களை அளிக்கவிருக்கிறோம்” - விராட் கோலி
, புதன், 25 மார்ச் 2015 (19:39 IST)
நாங்கள் மக்களுக்கு நிறைய ஆச்சரியங்களை அளிக்கவிருக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் எங்களுக்குள்ளேயே வைத்திருக்கிறோம் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
 
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்த வாய்ப்பு நிறைய பேருக்கு கிடைக்காது. இதை நான் இந்த உண்மையை, இந்த தொடரின் போதும், அரை இறுதிக்கு தகுதிபெற்ற போதும்தான் தெரிந்து கொண்டேன். 
 

 
நாங்கள் மக்களுக்கு நிறைய ஆச்சரியங்களை அளிக்கவிருக்கிறோம். ஆனால் நாங்கள் எங்களுக்குள்ளேயே எல்லாவற்றையும் வைத்திருக்கவில்லை.
 
நாங்கள் எல்லாவற்றிற்கும் தகுதியானவர்கள் என்றும் போதுமான அளவிற்கு திறமை உள்ளவர்கள் என்றும் எங்களுக்கு தெரியும். நாங்கள் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
 
எங்களது பந்து வீச்சாளர்கள் புத்திசாலித்தனத்துடன், ஆக்ரோஷமாகவும் பந்து வீசுகிறார்கள். இதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்ததுமே, உலக கோப்பைக்கு இந்திய அணி தயாராகியது. குறுகிய தினங்களே இருந்த நிலையிலும், அணி சிறப்பாக தயாராகியது. எனவேதான், எங்களால் சிறப்பாக ஆட முடிகிறது. 
 
நாங்கள் வென்று உலகக்கோப்பையுடன் திரும்பினால் உண்மையிலேயே மிகப்பெரிய சாதனையாக இருக்கும். நிச்சயம் இது ஆஸ்திரேலியாவில் நிகழும் என்று தெரியும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil